கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (75). செவ்வாயன்று தனது இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூர் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஹோப்ஸ் - சிங்காநல்லூர் இடைப்பட்ட காமராஜர் சாலை ராமானுஜநகர் அருகே சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து இவரது வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கோவிந்தராஜ் கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கோவிந்தராஜின் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வுத் துறை (கிழக்கு) காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி கோவை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வுத் துறை (கிழக்கு) காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி கோவை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.