காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லிங்கேஷ்வரி. சம்பவத்தன்று கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக லிங்கேஷ்வரி தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். இந்நிலையில், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் லிங்கேஷ்வரியிடம் தரக்குறைவாக நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் கருமத்தம்பட்டி அருகே லிங்கேஷ்வரி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் கருமத்தம்பட்டி அருகே லிங்கேஷ்வரி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.