கோவை, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாலராக பணியாற்றுபவர் சாஜினி (40). இவர் செவ்வாயன்று மதியம் அல்வேனியா பள்ளி அருகே வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒருவர் தலைக்கவசம் அணியாமல் வந்துள்ளார். அவரை சாஜினி நிறுத்தியபோது, நான் மனித உரிமை ஆணையத்தில் உள்ளேன், என்னையே நிறுத்துகிறாயா என தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் சாஜினி புகார் அளித்ததைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரின் பெயர் ராஜேஷ் (33) என்பதும், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் சாஜினி புகார் அளித்ததைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரின் பெயர் ராஜேஷ் (33) என்பதும், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.