கோவை, கணபதி மாநகர் பகுதியில் அமைந்துள்ள பன்னாரியம்மன் கோவில் அருகே ஒரு வாலிபர் கஞ்சா விற்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து பீளமேடு துணை காவல் ஆய்வாலர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில் காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் கஞ்சா விற்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அதேப் பகுதியைச் சேர்ந்த சாம் ஹார்பர்ட் (23) என்பதும், பீளமேடு, ஹோப்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதும் தெரியவந்தது.
மேலும், அவரை சோதனையிட்டதில் அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அவரை சோதனையிட்டதில் அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.