ஐந்து மண்டலங்களிலுள்ள ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களிலுள்ள மாநகராட்சி ‘பொது ஒதுக்கீட்டு இடங்கள்’ (ரிசர்வ் சைட்) கண்டறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக நகரமைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை செய்து ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சிறப்பு தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையியில்:- “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அலுவலருடன் ஆலோசனைகள் செய்து ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், கிழக்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 13 லட்சத்து 78 ஆயிரத்து 552.20 சதுரமீட்டர் அளவிலுள்ள 293 பொது ஒதுக்கீட்டு இடங்களும், மேற்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 10 லட்சத்து 29 ஆயிரத்து 952.275 சதுரமீட்டர் அளவிலுள்ள 439 பொது ஒதுக்கீட்டு இடங்களும், வடக்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 6 லட்சத்து 3 ஆயிரத்து 645.57 சதுரமீட்டர் அளவிலுள்ள 506 பொது ஒதுக்கீட்டு இடங்களும், தெற்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 6லட்சத்து 60 ஆயிரத்து 812.51 சதுரமீட்டர் அளவிலுள்ள 111 பொது ஒதுக்கீட்டு இடங்களும், மத்திய மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரத்து 373.86 சதுரமீட்டர் அளவிலுள்ள 60 பொது ஒதுக்கீட்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது அலுவலர்களுடன் ஆலோசனை செய்து துரிதமான முறையில் விரைவில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்கள் (ரிசர்வ் சைட்) பற்றி பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஏதுவாக கோயம்புத்தூர் மாநகராட்சி இணைய தளமான (www.ccmc.gov.in) என்ற முகவரியில் உள்ள (Reserved site details) என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு  மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...