சிறந்த கல்வியாளர்களுக்கு விருது வழங்கிய டைம்ஸ் ஆப் இந்தியா


தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகை தமிழக அளவில் கல்விச் சேவையில் சிறப்பாக செயலாற்றும் கல்வி நிறுவன அறங்காவலர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கண்டறிந்து அவர்களின் சிறந்த சேவைக்காக கல்வியாளர் விருதினை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வழங்கியது. 



இதில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி சிறந்த கல்வியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த கல்வியாளர் எடுய்கான் விருது வழங்கப்பட்டுள்ளது. 



இவர் கோவையில் குனியமுத்தூரில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவைப்புதூரில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை நடத்தி வருகிறார். இந்நிறுவனங்களில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். 

இந்நிறுவனங்களை சிறப்பாக வழிநடத்தி வருவதற்காகவும், சிறப்பான கல்விச் சேவைக்காகவும், சிறந்த தலைமைப் பண்பு, நிறுவனங்களை வழிநடத்தும் முறை, கல்விச் சேவையில் மாற்றம் ஏற்படுத்திய செயல்களுக்காக பாராட்டி இவ்விருதினை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழிக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.



இந்நிகழ்வின் போது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் சென்னை பதிப்பகத்தின் துணைத் தலைவர் மற்றும் பொறுப்புக் குழுத் தலைவர் ஆனந்த் மூர்த்தி, தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் தலைவர் மெய்-கிவைய் பார்க்கர் மற்றும் நாக் குழுவின் ஆலோசகர் ஷியாம் சுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...