கேரளாவில் இருந்து வரும் கோழி, முட்டைகளை வாங்க வேண்டாம்: தமிழக அரசு எச்சரிக்கை

கேரளாவில் பறவை காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அங்கிருந்து தமிழகத்திற்கு பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் இருப்பதாக மத்திய அரசு தககேரளாவில் பறவை காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அங்கிருந்து தமிழகத்திற்கு பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்ததையடுத்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கால்நடைத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு கோழிப் பண்ணையாளர்களுக்கு முன் எச்சரிக்கை குறித்த தகவல்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடைத்துறை அமைச்சர் பி. பாலகிருஷ்ணா ரெட்டி கூறியதாவது:-வல் தெரிவித்ததையடுத்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கால்நடைத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு கோழிப் பண்ணையாளர்களுக்கு முன் எச்சரிக்கை குறித்த தகவல்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடைத்துறை அமைச்சர் பி. பாலகிருஷ்ணா ரெட்டி கூறியதாவது:-

தமிழகத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரள எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன. நோய் வராத வகையில் 24 மணி நேரமும் முழு வீச்சில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தின் கோழிப் பண்ணையாளர்கள், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள், குஞ்சுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...