கோவை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் மருத்துவ உதவித்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள ஓய்வூதியர்கள் நவ.1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்குள் இத்திட்டத்தில் சேர வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மாத சந்தா தொகை ரூ.150-ம், குடும்ப ஓய்வூதியதார்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மாதம் ரூ.100 பிடித்தம் செய்யப்படும்.
மேலும், குடும்ப பாதுகாப்பு திட்டம் ஓய்வூதியதார்களுக்கு மட்டும் வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கு சந்தா தொகையாக ஓய்வூதியதாரர்களிடம் இருந்து மாதம் 80 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இத்திட்டம் ஓராண்டு சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்ட பின் காலமாகும் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் காலமாகும் ஓய்வூதியரின் வாரிசுகளுக்கு குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியுதவி ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும்.
விருப்பமுள்ள ஓய்வூதியர்கள் நவ.1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்குள் இத்திட்டத்தில் சேர வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மாத சந்தா தொகை ரூ.150-ம், குடும்ப ஓய்வூதியதார்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மாதம் ரூ.100 பிடித்தம் செய்யப்படும்.
மேலும், குடும்ப பாதுகாப்பு திட்டம் ஓய்வூதியதார்களுக்கு மட்டும் வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கு சந்தா தொகையாக ஓய்வூதியதாரர்களிடம் இருந்து மாதம் 80 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இத்திட்டம் ஓராண்டு சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்ட பின் காலமாகும் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் காலமாகும் ஓய்வூதியரின் வாரிசுகளுக்கு குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியுதவி ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும்.