கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த அச்சம்பாளையத்தில் பிஷ்மா புட் புராடக்ட் என்கிற தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பாக்கு வகையான மூலப்பொருட்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒருமாத சம்பளம் மற்றும் அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தீபாவளி நெருங்கிவிட்ட நிலையிலும் தற்போது வரை போனஸ் தொகை குறித்த பேச்சுவார்த்தையை பிஷ்மா நிறுவனம் தொடங்கவில்லை.
இதனையடுத்து சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு முறையீடு செய்தனர். இதன் பின் நிர்வாகத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், முத்தரப்பு பேச்சுவார்தையில் ஈடுபட்ட நிலையிலும் நிர்வாகத்தரப்பினர் போனஸ் தரமுடியாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
இதுகுறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.மனோகரன், ஏ.எல்.ராஜா, டி.வி.ரமணி ஆகியோர் கூறுகையில், ''கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றும் இத்தொழிலாளர்களுக்கு நியாயமாக தரவேண்டிய கொடுபடாத சம்பளம் (போனஸ்) தரமுடியாது என பிஷ்மா நிறுவனம் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆண்டு முழுவதும் தொழிலாளர்களின் உழைப்பைப் பயன்படுத்தி அதிகமான லாபத்தை ஈட்டியும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் பிஷ்மா நிறுவனத்தின் நடவடிக்கையை ஏற்க முடியாது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் சிஐடியு தலைமையில் தீவிரமான போராட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம்'' என தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் புது துணிகள் கூட வாங்குவதற்கு வழியில்லாமல் தொழிலாளர் நலத்துறை அலுவலக வாயிலில் அப்பாவிகளாய் நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் அமர்ந்திருந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒருமாத சம்பளம் மற்றும் அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தீபாவளி நெருங்கிவிட்ட நிலையிலும் தற்போது வரை போனஸ் தொகை குறித்த பேச்சுவார்த்தையை பிஷ்மா நிறுவனம் தொடங்கவில்லை.
இதனையடுத்து சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு முறையீடு செய்தனர். இதன் பின் நிர்வாகத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், முத்தரப்பு பேச்சுவார்தையில் ஈடுபட்ட நிலையிலும் நிர்வாகத்தரப்பினர் போனஸ் தரமுடியாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
இதுகுறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.மனோகரன், ஏ.எல்.ராஜா, டி.வி.ரமணி ஆகியோர் கூறுகையில், ''கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றும் இத்தொழிலாளர்களுக்கு நியாயமாக தரவேண்டிய கொடுபடாத சம்பளம் (போனஸ்) தரமுடியாது என பிஷ்மா நிறுவனம் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆண்டு முழுவதும் தொழிலாளர்களின் உழைப்பைப் பயன்படுத்தி அதிகமான லாபத்தை ஈட்டியும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் பிஷ்மா நிறுவனத்தின் நடவடிக்கையை ஏற்க முடியாது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் சிஐடியு தலைமையில் தீவிரமான போராட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம்'' என தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் புது துணிகள் கூட வாங்குவதற்கு வழியில்லாமல் தொழிலாளர் நலத்துறை அலுவலக வாயிலில் அப்பாவிகளாய் நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் அமர்ந்திருந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.