தன்வந்தரி திவாஸை முன்னிட்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் இன்று
ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘நீரிழிவு நோய் தடுப்பு
மற்றும் கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம்’ என்ற கருப்பொருளில் தேசிய ஆயுர்வேத
தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தேசிய அளவில் இந்த கருத்தில்
கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை பிரதமர் அலுவலக
இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தொடங்கி வைக்கிறார்.
மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேதம் மூலம் மேற்கொள்ளப்படும் தடுப்பு சிகிச்சைகள் குறித்து விளக்கப்படும். ஆயுர்வேத சிகிச்சையின் பலன்கள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். தேசிய ஆயுர்வேத தினத்தை சிறப்பாக கொண்டாடும்படி மாநில அரசுகளுக்கும் மாநில ஆயுர்வேத இயக்குனரகங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேதம் மூலம் மேற்கொள்ளப்படும் தடுப்பு சிகிச்சைகள் குறித்து விளக்கப்படும். ஆயுர்வேத சிகிச்சையின் பலன்கள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். தேசிய ஆயுர்வேத தினத்தை சிறப்பாக கொண்டாடும்படி மாநில அரசுகளுக்கும் மாநில ஆயுர்வேத இயக்குனரகங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது