குட்டியுடன் காட்டுக்குள் செல்ல தயாரான பெண் யானை


கோவை மாவட்டம், பெரியதடாகம் அருகே அமைந்துள்ளது மாங்கரை வனப்பகுதி. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கீழே விழுந்துகிடந்தது. இதனையறிந்த வனத்துறை மருத்துவர்கள் அந்த பெண் காட்டு யானைக்கு சிகிச்சை அளித்துவந்தனர். 

யானையின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதியிலேயே உடல் நலமின்றி படுத்துக்கொண்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 21-ம் தேதியன்று அந்த யானையை வனத்துறையினர் லாரியின் மூலம் சாடிவயல் யானைகள் முகாமிற்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். இதனிடையே, அந்தப் பெண் காட்டு யானை கடந்த 24-ம் தேதியன்று ஆண் குட்டி ஒன்றை ஈன்றது. 

இதைத்தொடர்ந்து, யானைக்கும், யானை குட்டிக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததைத்தொடர்ந்து இரு யானைகளின் உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

எனவே, கும்கி யானைகளின் உதவியுடன் அந்த இரு யானைகளையும் காட்டிற்குள் அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

வனத்துறையினரின் தொடர் சிகிச்சைக்குப் பின் காட்டு யானையின் உடல்நலம் முன்னேற்றமடைந்து தற்போது குட்டியுடன் காட்டிற்குள் செல்லும் நிகழ்வு வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...