தூய்மை தமிழகம் சார்பில் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்ட மாநகராட்சியின் சார்பில் ''நம் தீபாவளி ஆனந்தக் கொண்டாட்டத்தில் இயற்கை சூழலை இணைத்துக்கொள்வோம்'' என்ற தலைப்பில் இது கடைபிடிக்கப்பட உள்ளது.
வரும் தீபாவளிக்கு பல்வேறு விதமான சீர்கேட்டை ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்த்து இயற்கை சூழலுடன் இணைந்து தீபாவளியினை கொண்டாடுவோர் 8190000200 என்ற எண்ணிற்கு தங்களது பண்டிகைக் கொண்டாட்டங்களை வாட்சப்பில் பதிவு செய்யலாம். அதில் சிறந்த பதிவினைப் பாராட்டி பரிசளிக்க கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
வரும் தீபாவளிக்கு பல்வேறு விதமான சீர்கேட்டை ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்த்து இயற்கை சூழலுடன் இணைந்து தீபாவளியினை கொண்டாடுவோர் 8190000200 என்ற எண்ணிற்கு தங்களது பண்டிகைக் கொண்டாட்டங்களை வாட்சப்பில் பதிவு செய்யலாம். அதில் சிறந்த பதிவினைப் பாராட்டி பரிசளிக்க கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.