வாடிக்கையாளர் வருகையை எதிர்பார்க்கும் சிறுகுறு வியாபாரிகள்

இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் படும் மந்தம் என சிறுகுறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காந்திபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளன. அவர்களில் வியாபாரம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சிறுகுறு வியாபாரி மீனாட்சி சுந்தரம்:-

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால வியாபாரம் படும் மந்தமாக உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை இம்மாதம் கடைசி நாட்களில் வருவதால் மாத கடைசியில் பொதுமக்களிடம் பணம் இல்லாமல் இருக்கிறது. இதனால் வியாபாரிகளுக்கும் தொழில் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.



இதனால் வியாபாரங்களில் வரவு குறைவாகவும், செலவு அதிகமாகவும் உள்ளது. அதே சமயம் தற்போது பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான ஆன்லைன் வர்த்தகங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடைவீதிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்குகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் பொதுமக்களை பல்வேறு இணைப்புகளில் இணைப்பதற்காகக் அனைத்து பொருட்களுக்கும் அதிக அளவில் தள்ளுபடி கொடுத்து வருகின்றனர். பல்வேறு  இதன் மூலம் சிறுகுறு வியாபாரிகளின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும் இப்பகுதிகளில் அதிநவீன வசதிகளுடன் உயரடுக்குமாடி கட்டிடங்களில் பல்வேறு கடைகள் வருவதால், இங்கு இருக்கும் 200க்கும் மேற்பட்ட கடைகளில் பொதுமக்கள் வருவதற்கும் யோசிக்கின்றனர். இந்த தீபாவளி பண்டிகை வியாபாரம் மிக மோசமாகவும், அதேசமயம் வாடிக்கையாளர்கள் எங்கள் கடைகளில் வருவதற்கு நாங்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம். இந்த மாத தீபாவளி வியாபாரம் வழக்கமான நாட்களைப் போலவே உள்ளது என்றார். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...