இந்திய எல்லை பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, நேற்று வீரமரணம் அடைந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜித்தேந்திர குமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குனர் அருண் குமார் இன்று பங்கேற்றார்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் நமது வீரர் குர்னாம் சிங் படுகாயம் அடைந்தது முதல் நமது எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் படையை சேர்ந்த 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என கூறினார்.

எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளவர்கள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் எல்லாவகை சவால்களையும் எதிர்கொள்ள நமது வீரர்கள் விழிப்புணர்வுடன் தயார்நிலையில் காத்திருக்கின்றனர் எனவும் அருண் குமார் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...