ஊழியர்களுக்கு கார்களை தீபாவளி பரிசாக வழங்கிய குஜராத் வைர வியாபாரி

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி தோலாகியா.

“ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர் உலகம் முழுவதும் வைரம் ஏற்றுமதி செய்து வருகிறார்.

வைரம் பட்டை தீட்டும் தொழிலில் புகழ்பெற்ற இவரது தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிறப்பாக பணிபுரியும் தொழிலாளர்களை இவர் ஆண்டு தோறும் தேர்வு செய்து, வித்தியாசமான முறையில் தீபாவளி போனஸ் பரிசு வழங்குவதை வழக்கத்தில் வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு இவர் தன் ஊழியர்களில் 491 பேருக்கு 491 கார்களை தீபாவளி போனசாக வழங்கினார். 200 பேருக்கு வீடு கொடுத்தார்.




இந்த ஆண்டும் அவர் தன் ஊழியர்களுக்கு வீடுகள், கார்களை தீபாவளி போனசாக கொடுக்க முடிவு செய்தார். இந்த பரிசுகளைப் பெற 1660 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் 400 பேருக்கு வீடு பரிசாக கொடுக்கப்பட்டது. 1260 பேருக்கு கார்களை தீபாவளி போனஸ் பரிசாக வைர வியாபாரி தோலாகியா கொடுத்துள்ளார்.

குஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள துதலா எனும் கிராமத்தில் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த சப்ஜி தோலாகியா சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர். இளம் வயதில் தன் மாமாவிடம் கடன் வாங்கி வைரம் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டார்.

அந்த தொழிலில் கிடைத்த வருமானம் அவரை கோடீசுவரராக உயர்த்தியது. ஓரளவு வசதிகள் வந்ததில் இருந்து அவர் ஆண்டு தோறும் தீபாவளி போனஸ் பரிசு வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு மட்டும் அவர் ரூ.51 கோடிக்கு தீபாவளி போனஸ் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...