2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் !


கோவை திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தக்காளி தோட்டத்தில் புகுந்த 12 காட்டு யானைகள், சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. யானைகள் ஊருக்குள் புகுந்து  பொதுமக்களை அச்சுறுத்துவது சமீப காலங்களில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் யானைகள்  ஊருக்குள் புகுந்து தாக்கி வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பிலான தோட்டத்தில் வாழை, தக்காளி, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 1 மணி அளவில் நாகராஜின் தோட்டதிற்குள் புகுந்த 12 காட்டு யானைகள் தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியதோடு அருகில் இருந்த வாழை தோப்பில் புகுந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாய்த்துள்ளது. 



பின்னர், தோட்டத்தில் அமைந்துள்ள தோட்ட குடிசையை காட்டுயானைகள் தாக்கி உள்ளது. அப்போது குடிசையில் தங்கி இருந்த விவசாயி வடிவேல் நாய் குரைக்கும்  சத்தம் கேட்டு எழுந்துபார்த்தபோது யானைகள் குடிசையை சுற்றி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உயிருக்கு பயந்து தோட்டத்தை விட்டு வெளியேறியவரை சில யானைகள் அவரை துரத்தியதோடு, குடிசையில் வைத்திருந்த அரிசி, பருப்பு மற்றும் தென்னை வெல்லம் ஆகியவை உட்கொண்டதுடன், சாலை குடிசையை இடித்து தள்ளியதில் உள்ளிருந்த டிவி உள்ளிட்ட பொருட்களும் நொறுக்கியது.



யானைகளிடமிருந்து தப்பித்த வடிவேல் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தாமதமாக வந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து யானைகளை பக்கத்து  தோட்டத்திற்கு விரட்டினர். யானைகள் விலை நிலங்களில் புகுந்ததின் காரணமாக சுமார் 2லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், இதற்கான உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனவும் தோட்ட உரிமையாளர் நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 



மேலும் யானைகள் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்துவது சமீப காலங்களில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். ஊருக்குள் புகும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஒரே சமயத்தில் 12 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடம் பீதியை கிளப்பியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...