கோவையை சேர்ந்த வட மாநிலத்தவர் இன்று தீபாவளி பண்டிகையை விமர்சியாக கொண்டாடினர்.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக  கொண்டாடப்பட்ட நிலையல் இன்று கோவையில் வடமாநில  மாநிலத்தை  சேர்ந்தவர்கள் இன்று தீபாவளி பண்டிகையை  குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். 

இந்துகளின் முக்கிய  பண்டிகையான தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். தொழில்  நகரமான கோவையில் ராஜஸ்தான், ஒரிசா,கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை ஆர்.எஸ் புரம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் அவர்களுடைய  கோவில்களுக்கு சென்று பின்னர்  வீடுகளில் பூஜை செய்து, புத்தாடை  அணிந்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி  வருகின்றனர். 



மேலும், இப்பண்டிகை தினத்தில் சுற்றுப்புற சூழலை மாசுப் படுத்தும்  பட்டாசுகளை வெடிகக போவது இல்லை என்றும் ஒருசிலர்  தெரிவித்துள்ளனர். தீபாவளி தினத்தன்று இரவு நேரங்களில் மட்டுமே  பூஜைகள் செய்து வழிப்படுவது வழக்கம் என்றும், இவ்வருடம் சூரிய  கிரகனம் பகலில் வருவதால், காலையிலேயே பூஜைகள் செய்து  வழிபடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பண்டிகையை  முன்னிட்டு ஜெயின் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு  வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...