கோவையில் விடிய விடிய கொட்டிய கனமழை!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நேற்றிரவு பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 30ம் தேதி துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்றே நேற்று துவங்கியுள்ளது.

இந்நிலையில், கோவையில் நேற்று மாலை முதலே மழை பெய்தது. இரவில் இடி மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. கோவை மாவட்டத்தில் மொத்தமாக 413.90 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். 



மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அவினாசி ரோட்டில் லட்சுமி மில் பகுதி அருகில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் அவினாசி மேம்பால சாலையில் மழை தண்ணீர் தேங்கியது. இன்று அதிகாலை வரை அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து வெளியேற்றினர். கோவை லங்கா கார்னர் பாலம், கோவை அரசு ஆஸ்பத்திரி போன்ற பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் துடியலூர், போத்தனூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. துடியலூர் அருகே வெள்ளக்கிணறு சமத்துவபுரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

கோவை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பொள்ளாச்சி - 110

பெரிய நாயக்கன் பாளையம் - 52

சூலூர் - 43

கோவை தெற்கு-37

வால்பாறை - 36

ஏர்போர்ட்-29.20

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-28.70

சின்ன கல்லார் - 18

மேட்டுப்பாளையம் - 11

சின்கோனா - 8

அன்னூர் -  4.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...