திருமலையம்பாளையத்தில் யானைகள் தொடர் அட்டகாசம்!


கோவை திருமலையாம் பாளையம் விவசாய நிலத்திற்குள் இரண்டாவது நாளாக புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த 600 க்கும் மேற்ப்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தது, வனத்துறை அலட்சியத்தால் விவசாய பயிர்கள் நாசமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கோவை திருமலையாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பரின் தோட்டத்திற்குள் நேற்று முன் தினம் புகுந்த 13 காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்ட ஒரு ஏக்கர் தக்காளி பயிர் மற்றும் தென்னை, வாழை , தேக்கு மரங்களை நாசம் செய்தது, இதை அடுத்து விடிய விடிய போராடி யானை காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது, இதை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இரவு 11 மணியளவில் 3 குட்டிகளுடன் மொத்தம் 9 யானைகள் பக்கத்துத்தோட்டமான கோயஸ் தோட்டம் உரிமையாளர் பி.வி. முகமது தாஷிர் என்பரின் தோட்டத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட 600 க்கும் மேற்ப்பட்ட வாழை மரங்களையும் முற்றிலுமாக நாசம் செய்தது. 



மேலும் சுற்றுச்சுவரை உடைத்து அங்குள்ள ஒரு தொழிற்சாலைக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாலை 3 மணிக்கே வருவதாக கூறிய வனத்துறையினர், இரவு ஒரு மணி வரை வராத்தால் அப்பகுதி விவசாயிகளே வனத்திற்குள் விரட்டியடித்தனர். வனத்துறைத்துறையினர் அலச்சியபோக்கே இந்த நாசத்திற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.  மேலும் விரட்டியடிக்கப்பட்ட யானைகள் பக்கத்துத்தோட்டதிற்குள் நுழைந்ததால் இரவு முழுவதும் தூங்காமல் அப்பகுதி விவசாயிகள் விழித்திருக்க நிலை ஏற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...