ஊத்துக்குளி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து.



ஊத்துக்குளி அருகே உள்ள கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவறான பாதையில் சென்ற லாரி அடுத்தடுத்த 5 வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயம். 



வட மாநிலத்தவருக்கு சொந்தமான லாரியை அதன் டிரைவர் குடிபோதையில் ஓட்டி வந்துள்ளதாக தெரிகிறது. செங்கப்பள்ளி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாருமாறாக வந்த லாரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற இரண்டு கார் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் இவற்றின் மீது மோதி விட்டு நிற்காமல் கோவையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசுபேருந்தின் மீது மோதியதில் அரசு பேருந்து கவிழ்ந்தும், அதன்பின்னர் அந்த லாரி நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி நின்றதாகவும் தெரிகிறது. 

இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனார். விபத்தினை ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு மண்டல காவல் ஆய்வாளர் பாரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா மற்றும் ஊத்துக்குளி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காயம் அடைந்தவர்கள் பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை. 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...