கோவை மாநகரில் நடை பெற்று வரும் மேம்பால பணிகளால் ஆம்புலன்சுகள் செல்ல இடையூறாக இருப்பதாகவும், ஆமினி பேருந்து நிலையத்தை உடனடியாக நீலாம்பூருக்கு மாற்ற கோரியும் சுயமரியாதை மாணவர் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ட்ரச்சரில் வந்து மனு அளித்தனர்.

இது குறித்து அந்த இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வினோத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்த் நெரிசலை கட்டுப்படுத்த ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்ற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேருந்துகள் மேம்பாலங்களின் கீழ் நிறுத்தப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் ஆம்புலன்சுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்றக்கோரி ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அந்த இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வினோத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்த் நெரிசலை கட்டுப்படுத்த ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்ற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேருந்துகள் மேம்பாலங்களின் கீழ் நிறுத்தப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் ஆம்புலன்சுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்றக்கோரி ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.