தேசிய ஒற்றுமை நாள் முன்னிட்டு இன்று கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் லஞ்சம் ஒழிப்பு வார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் லஞ்சம் ஒழிப்பு வார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
