சவுதி அரேபியாவில் கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் முறியடிப்பு - ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 2018-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தற்போது அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சவுதி அரேபியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான தகுதி போட்டி சவுதி அரேபியா தலைநகர் ஜெட்டாவில் உள்ள சர்வதேச கால்பந்து மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகப்படும் 8 பேரை சவுதிஅரேபிய போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள். தலா ஒருவர் சூடானை சேர்ந்தவர்கள் மற்ற 4 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இப்போட்டியின் போது கால்பந்து மைதானத்தில் கார்குண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் வெடி குண்டு தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தீவிரவாதிகளின் 2-வது தாக்குதல் சதியாகும். இதற்கு முன்பு சவுதி அரேபியாவில் குவாதிப் தமாம் ஆகிய 2 நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டனர். அச்சதி முறியடிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இங்கு தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...