கோவை வெள்ளளூர் குப்பைக்கிடங்கு அமைந்துள்ள பகுதியில் குடிநீர் மாசுபடுவதையொட்டி அளிக்கப்பட்ட புகாரில் நேரில் ஆஜராகாத கோவை மாநகராட்சி ஆனையாளர் விஜயகார்த்திகேயனுக்கு தென் மண்டலபசுமைத்தீர்ப்பாயம் இன்று நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் அடுத்த வெள்ளலூரில் ஆயிரக்கணக்கான குடியிருப்பகள் உள்ளது. இதில் கோவை மாநகராட்சியின் 600 ஏக்கர் நிலப்பரப்பளவில் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் கோவை மாநகரட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரப்பும் ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளின் படையெடுப்பால் இங்குள்ள மக்கள் பெரும் உடல் உபாதகைகளுக்கு ஆளாகின்றனர். இதனையடுத்து இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த குப்பைக்கிடங்கில் உள்ள கழிவுகளில் இருந்து வெளியாகும் நட்சுக்களால் நிலத்தடி நீர் மாசடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர், ஈஸ்வரன் பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் விசாரனைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆனையாளர் விஜயகார்த்திகேயனுக்கு உத்தரவிட்டது. தொடர்ச்சியாக மூன்றுமுறை சம்மன் அனுப்பப்பட்டு நேரில் ஆஜராகதாதால் திங்களன்று விசாரனை மேற்கொண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் நவம்பர் 23 தேதிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.