நலமுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகள்


கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் வனத்துறை மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சாடிவயல் யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்று அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு ஆண் குட்டியை அது ஈன்றது. 

தொடர்ந்து தாய் மற்றும் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து வந்த வனத்துறை மருத்துவர்கள் அதனை வனப்பகுதிக்குள் விட்டனர். 

இதனைத்தொடர்ந்து அந்த இரு யானைகளையும் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது அந்த யானைகள் போரதி, முள்ளான்காடு வனப்பகுதியில் சுற்றிவருகிறது. பெண் காட்டு யானை தற்போது, வனத்தின் சூழலுக்கு ஏற்றாற்போல் தன் குட்டியை பராமறித்து வருகிறது. ஓரிரு நாட்களில் மற்ற யானைக் கூட்டத்துடன் இணைந்துவிடும். இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு அந்த தாய் மற்றும் குட்டி யானை வனத்துறையினரின் கண்காணிப்பிலேயே இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...