அமெரிக்க புற்றுநோயியல் நிலையத்துடன் இணைந்த கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி

கோவை மாநகரில் அனைத்து உடல்நல சிகிச்சை தேவைகளுக்கும் ஒரே புகழிடமாகத் திகழும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஹைதராபாத்தைச் சார்ந்த அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டியூட் உடன் இணைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக விரிவான புற்றுநோய் சிகிச்சை பிரிவு 2017ம் ஆண்டு ஜூலையில் முழுமையாக இயங்கச் செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் இக்குழுமங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஆன்காலஜி இன்ஷ்டியூட், செயல் இயக்குநரும் மற்றும் கூட்டு நிறுவனருமான ஜோசப் ஏ.நிக்கோலஸ் கூறியதாவது:- 

அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டியூட் என்பது மேற்கத்திய தரக்கட்டுப்பாடுகளை சார்ந்து முழுமையான உயர்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வழங்கும் நிறுவனமாகும். இதன் முதல் மையத்தை தமிழகத்தில் கோவை மாவட்ட ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பெறுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்'' என்றார்.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனத் தலைவரும், நரம்பு மற்றும் தண்டுவட அறுவைசிகிச்சை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் கே.மாதேஸ்வரன் கூறியதாவது:- 

''சமூக ஊடகம் மற்றும் இணையதள வசதி எளிதாக கிடைக்கும் நிலையில் மக்கள் இப்போது உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று விரும்புகிறார்கள். எங்களுடைய விரிவான புற்றுநோய் சிகிச்சை பிரிவு, அமெரிக்க புற்றுநோயியல் நிலையத்துடன் இணைந்து எங்களுடைய சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உலகிலுள்ள தலைசிறந்த புற்றுநோய் மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு மருத்துவ நடவடிக்கைகளை தொடங்கவுள்ளது'' என்றார்.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவன தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் ஆலோசனையில் உருவான இத்திட்டம், இக்குழுமத்தை அங்கம் வகிக்கும் பிரசிதிபெற்ற மருத்துவ புற்றுநோயியல் வல்லுநர் டாக்டர் சுதாகர் நடராஜன் மற்றும் அமெரிக்க ஆன்காலஜி இன்ஷ்டியூட் மருத்துவ புற்றுநோயியல் இயக்குநர் தலைமையில் சிகிச்சை ரீதியாக நடத்தப்படும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...