2.4 கிலோ கஞ்சா பறிமுதல்!


புளியம்பட்டியிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற கேரளாவை சேர்ந்த இருவரை கோவை காரமடை வனத்துறையினர் பிடித்து போதை பொருள் தடுப்பு நுன்னறிவு பிரிவு போலிஸிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.



கோவை காரமடை வனப்பகுதியில் நேற்று மதியம் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேரளா பதிவு எண் கொண்ட பொலேரோ வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 2.4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர். போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.



மேலும் அவர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு நுன்னறிவு காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் காரின் உரிமையாளர் சதீஷ் குமார் என்றும்,மற்றொருவர்கள் ரமேஷ் குமார் என்பதும் தெரிய வந்த்து. மேலும் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடுக்கு எடுத்துசென்றதும் தெரிய வந்தது, இதை அடுத்து கார் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பரிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...