புளியம்பட்டியிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற கேரளாவை சேர்ந்த இருவரை கோவை காரமடை வனத்துறையினர் பிடித்து போதை பொருள் தடுப்பு நுன்னறிவு பிரிவு போலிஸிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.

கோவை காரமடை வனப்பகுதியில் நேற்று மதியம் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேரளா பதிவு எண் கொண்ட பொலேரோ வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 2.4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு நுன்னறிவு காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் காரின் உரிமையாளர் சதீஷ் குமார் என்றும்,மற்றொருவர்கள் ரமேஷ் குமார் என்பதும் தெரிய வந்த்து. மேலும் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடுக்கு எடுத்துசென்றதும் தெரிய வந்தது, இதை அடுத்து கார் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பரிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.