ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் இந்திய துருப்புகள் மீதான பாக்., படையின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்திய இந்திய படையின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் இந்திய படையினர் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கிறது. எல்லை ஒட்டிய நசேரா, மெந்தர், சம்பா, அர்னியாவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய படையினர் மீது, பாகிஸ்தான் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எல்லையோர பொதுமக்கள் 3 பேர் காயமுற்றுள்ளனர். இந்திய தரப்பினரும் பதிலடி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
ஊடுருவல் முயற்சி:
இது போல் ரஜோரி, பந்திபூரா அஜாரில் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இதில் இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டி ஊடுருவலை முறியடித்தனர்.
ஊடுருவல் முயற்சி:
இது போல் ரஜோரி, பந்திபூரா அஜாரில் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இதில் இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டி ஊடுருவலை முறியடித்தனர்.