வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடந்த செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7ம் தேதி கோவை மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும மீட்புப் பணிகள் துறை, பொதுசுகாதாரத்துறை, கால்நடை உள்ளிட்ட பல துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார்.
இதில், கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது 31 இடங்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மண்டலக்குழு, முன்னெச்சறிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, வெளியேற்றும் குழு, நிவாரண முகாம் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 1077 என்ற அழைபேசி வசதியுடன் அவசரப் பணி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று மழையினால் வெள்ள பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதில், கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது 31 இடங்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மண்டலக்குழு, முன்னெச்சறிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, வெளியேற்றும் குழு, நிவாரண முகாம் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 1077 என்ற அழைபேசி வசதியுடன் அவசரப் பணி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று மழையினால் வெள்ள பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.