கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் மர்மநபர் ஒருவர் அந்தப்பகுதியில் இருந்த சந்தனமரத்தினை வெட்டிக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து விசாரிக்கையில் அவர் அந்த சந்தன மரத்தினை வெட்டி கடந்த முயற்சிப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.