8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: RSS-க்கு தொடர்பு இருக்கலாம் என காங்., குற்றச்சாட்டு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சிறையிலிருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடு முழுவதும் கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். இது முக்கியமான பிரச்சனை என கூறியுள்ள அவர், ஆனால் சிமி தீவிரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அல்லது அவற்றை சார்ந்த சில அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சிமி தீவிரவாதிகள் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை மத்தியபிரதேச காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. என்கவுன்டர் வீடியோ காட்சியில் அசைவற்று கிடக்கும் தீவிரவாதிகள் மீது மீண்டும் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதனால் சிமி தீவிரவாதிகள் கொல்லப்பட்டது போலியானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் இதனை நிராகரித்துள்ள காவல்துறையினர் இது திட்மிட்டு நடத்தப்படவில்லை என்றனர். தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னரே பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளனர். என்கவுன்டரின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    

சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்ப உதவியர்கள் குறித்தும் தேசிய புலனாய்வு மூலம் விசாரணை நடத்தப்படும் என மத்தியபிரதேச அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் பூபேந்தர் சிங், இந்த தீவிரவாதிகள் ஏற்கனவே சிறையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர் என்றார்.  முன்னதாக போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் 8 பேர் நேற்று அதிகாலை சிறைகாவலரை கொன்று விட்டு தப்பினர். பின்னர் தப்பிச் சென்ற அவர்களை புறநகர் பகுதியில் சுற்றிவளைத்த போலீஸார் அவர்களை சுட்டு கொன்றனர்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...