கோவை ரயில் நிலையத்தில் அனைத்து மகளிர் உதவி மையம் திறப்பு

தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் துவக்கப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம் அருகே, அனைத்து மகளிர் உதவி மையம் இன்று (01.11.2016)  திறக்கப்பட்டுள்ளது. இது போன்று இந்திய ரயில்வேயில் முதன் முறையாக தெற்கு ரயில்வேயில் 7 ரயில் நிலையங்களில் மகளிர் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 



இந்த அனைத்து மகளிர் உதவி மையத்தில் பெண் பயணிகளுக்கு தேவையான ரயில் பயணம் சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளும் சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு பெண் ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலர்களால் வழங்கப்படும். மேலும், பெண் பயணிகள் முன்னர் பணம் செலுத்தி பயணம் செய்யும் ஆட்டோ வசதி மற்றும் அரசு ரயில்வே போலீசாரிடம் ஏதாவது புகார்செய்ய விரும்பினால் அதற்கான வசதி ஆகியவைவும் செய்து தரப்படும். மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்ட விரும்பும் தாய்மார்களின் வசதிக்காக தனியாக பாலூட்டும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. 



தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் அனைத்து முக்கிய ரயில்நிலையங்களிலும் இது போன்ற அனைத்து மகளிர் உதவி மையங்கள் விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...