பருவமழைக் காலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவது எப்படி?

இன்று முதல் (நவம்பர் 1) டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்காலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவது எப்படி என கோவை போக்குவரத்து காவல் துணை ஆணைய‌ர்  சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறுகையில்:- 
மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கு,  பிரேக்,  கிளட்ச்,  டயர் மற்றும் வைப்பர் போன்றவை நன்கு இயங்கும் நிலையில் உள்ளதா என்று பரிசோதிப்பது அவசியம். மழையின் போது வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மழை பெய்யும் போது நம்மால் சாலையை தெளிவாக பார்க்க முடியாது. தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளில் மிக மெதுவாக வாகனத்தை செலுத்த வேண்டும். மழையால் ஏற்பட்ட சேதம், மழைநீரால் அடித்து வரப்பட்ட பொருட்கள் மற்றும் மூழ்கியுள்ள வேகத்தடைகளால் விபத்து நேரிடலாம். சாலையின் மையப்பகுதியில் பயணிப்பது பாதுகாப்பானது. 


தரைப்பாலங்களின் மேல் வெள்ளம் செல்லும் போது அதனை கடக்க முயற்சிக்க வேண்டாம். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் காவல்துறை மேற்கொள்ளும் தடை மற்றும் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும். சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பது, மரம் விழுந்து கிடப்பது,  மின்சார கம்பிகள் அறுந்து கிடப்பது மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100ல் தகவல் தெரிவிக்கலாம். மேலும், கோவை மாநகர பொதுமக்கள் 8190000100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார். வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...