கோவையில் 12 பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் நோய் பரவி உள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

கோவை மாவட்டத்தில் வாளையாறு, வேலாந்தவளம், ஆனைக்கட்டி உள்ளிட்ட 12 பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னரே தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கேரள மாநிலத்த்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை உள்ளிட்டவை ஏற்றி வரும் வாகனங்கள்திருப்பி அனுப்பப்படுகின்றன. 

கோவை கோட்டத்தில் 5 சோதனைச்சவடிகளும், பொள்ளாச்சி கோட்டத்தில் 7 சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்செல்வன் தெரிவித்தார். மேலும் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

கோவை மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...