பாகிஸ்தான் கப்பல் உடைக்கும் தளத்தில் வெடி விபத்து - 10 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரையொட்டி கடானி என்ற துறைமுகத்தில் காலாவதியான கப்பல்களை உடைக்கும் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தது.

பயணத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு எண்ணை கப்பலின் டேங்கரை கியாஸ் வெல்டிங் இயந்திரத்தால் வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது கப்பலின் ஒருபகுதி திடீரென்று வெடித்து சிதறியது. இதைதொடர்ந்து, அடுத்தடுத்தும் வெடிச் சத்தம் கேட்டது.

இந்த விபத்தில் சிக்கி பத்து தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் கராச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பிரதமர் நவாஸ் ஷெரிப், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்குமாறும் டாக்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...