மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சி.ராமச்சந்திரன் (82). இவர் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 25 வது வார்டில் சி.பி.ஐ. சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை கவுன்சிலராக பதவி வகித்தார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும் திகழ்ந்து வந்தார், சி.ஆர். என்று கட்சியினாராலும், பொதுமக்களாலும் அழைக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.