கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. வெரைட்டிஹால் சாலையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காந்திமதி (43) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதனன்று (இன்று) காலை அலுவலகம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றுள்ளனர். அவிநாசி சாலை உள்ள அண்ணாசிலை அருகே சென்றுகொன்றிருந்த போது பழனிச்சாமியின் வாகனத்தின் மீது 2ம் எண் கொண்ட தனியார் பேருந்து மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி காந்திமதி கீழே விழுந்தநிலையில் பேருந்து அவரது தலையில் ஏறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே காந்திமதி பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துக்கு புலனாய்வு பிரிவு (கிழக்கு) காவல் துறையினர் உடலை மீட்டு கோவை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துக்கு புலனாய்வு பிரிவு (கிழக்கு) காவல் துறையினர் உடலை மீட்டு கோவை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.