கோவை, ராஜா வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தகம் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியின் கீழ் ஒப்பந்த முறையில் செயல்படும் இந்த வாகன நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துவந்தனர். இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், அதிகாரிகளை அங்கு சோதனைக்காக அனுப்பினார். இதில், அந்த வாகன நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இந்த வாகன நிறுத்தத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.
பொதுமக்களை வஞ்சித்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வாகன நிறுத்தத்திற்கு எச்சரிக்கை, அபராதம், ஒப்பந்தத்திற்கு இடைக்காலத் தடை என எதுவும் விதிக்காமல் நேரிடையாக ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.