அப்பாவி மக்கள் 8 பேர் கொலை: 14 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை அழித்து பாடம்

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் காஷ்மீர் எல்லையில் வசித்து வந்த 8 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படை பாகிஸ்தான் ராணுவத்தின் 14 நிலைகளை அழித்துள்ளது.

யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது. இதையடுத்து காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோட்டுப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் குக்கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று எல்லையோரம் உள்ள சம்பா, ரஜோரி, ஜம்மு, பூஞ்ச், ராம்கர், நவ்ஷேரா, பாலகோட் பகுதிகளை நோக்கி எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படை பாகிஸ்தான் ராணுவத்தின் 14 நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

ஜம்முவில் உள்ள ராம்கர் மற்றும் அர்னியா செக்டர்கள் அருகே சர்வதேச எல்லையையொட்டி இருந்த பாகிஸ்தான் நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...