நூறு ஆண்டைக் கடந்து மக்களின் சேவையில் பணியாற்றி வருகிறது வால்பாறை தபால் நிலையம்.
1916ம் ஆண்டு துவங்கப்பட்டது வால்பாறை தபால் நிலையம். இன்றுடன் 100 வது அண்டைக் கடந்து மக்களின் சேவையில் சாதனை படைத்துள்ளது. 1916ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டு குதிரையின் மூலம் மக்களுக்கு தபால்களை விநியோகித்து வந்த வால்பாறை தபால் நிலையத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சிகள் பெற்று, நவீன வசதிகள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வால்பாறையில் உள்ள 56 எஸ்ட்டேட் பகுதிகளிலும் சுமார் 200 தபால் காரர்களை எஸ்ட்டேட் நிர்வாகமே வால்பாறை தபால் நிலையம் சார்பில் நியமனம் செய்திருந்துள்ளது.

இந்த தபால் நிலையம் அனைத்து விதமான சேமிப்பு, இணையதள வசதி மற்றும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகளும் வாடிக்கையார்களிடம் குடும்ப அங்கத்தினரைப் போலவே நடந்துகொள்கின்றனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.