கோவை, கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள ராமனன்கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு கருப்பம்மா (67), பழனியம்மாள் (55) என்ற இரு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், கோவையில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று (புதனன்று) அதிகாலை 2 மணியளவில் இவர்களது வீட்டின் ஒருபக்கச் சுவர் இடிந்து உறங்கிக்கொண்டிருந்த கருப்பம்மா மற்றும் பழனியம்மாள் மீது விழுந்துள்ளது. இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரியகடை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.