டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையில் கோவை மாநகராட்சி தீவிரம்!


கோவை மாவட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டப்பாளையம் சாலை, குமாரசாமி காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொது கழிப்பிடக் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் புதனன்று நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து, 22 வது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதனைத்தொடர்ந்து, தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளையும், குப்பைத்தொட்டிகளை பராமறிப்பது குறித்தும் அவர் பார்வையிட்டார். 

இதையடுத்து கோவையில் சில காலமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்தார். இதில், ஆர்.எஸ்.புரம், கௌலிபிரவுன் சாலை, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...