ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகனம் நிறுத்துவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆர்.எஸ்.புரம் சாலையோரத்தில் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மாதங்களில் வாகனங்கள் நிறுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் புதனன்று (இன்று) நடைபெற்றது.



இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், வருகின்ற நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் முதற்கட்டமாக ஒத்திகையாக ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மாதங்களில் வாகனங்கள் நிறுத்துவது நடைமுறைக்கு வருகிறது. மாநகராட்சி சார்பாக சாலைக் குறியீடு அமைத்தல், சாலையோரம் இருபுரங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், பொதுமக்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும். சாலையோர பணிகளில் ஈடுபடும் போது காவல் துறையினருக்கும், தன்னார்வலர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் கூறினார். 

இக்கூட்டத்தில், காவல் உதவி ஆணையர் மகுடபதி, வியாபார நிறுவன உரிமையாளர் அன்னபூரணா சீனிவாசன், ரவிசாம், ஹேமா கண்ணா, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...