மாயமான மலேசிய விமானம் விமானியால் மூழ்கடிக்கப்பட்டதா? விமான பாகங்கள் ஆய்வில் பகீர்

சிட்னி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் மாயமானது. இதை தேடி ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனாலும் விமானத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தான்சானியா அருகே மலேசிய விமானத்தின் இறக்கை மீட்கப்பட்டது. மேலும் 20 சிறிய பாகங்கள் ஆப்ரிக்க கடலோர பகுதிகளில் மீட்கப்பட்டன. இவற்றில் 3 மட்டுமே மலேசிய விமானத்தின் பாகங்கள். இவற்றின் மூலம் முக்கிய தகவல் கிடைக்குமா என ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொண்டது. 

விமான இறக்கையில் உள்ள பிளாப் தகடுகளை ஆய்வு செய்தபோது, அவை விமானம் தரையிறங்கும்போது இருக்கும் நிலையில் இல்லை என்பது தெரியவந்தது. செயற்கைக்கோளுடன் விமானத்துக்கு இருந்த கடைசி தகவல் தொடர்பை ஆராய்ந்த போதும், மிக உயரமான நிலையில் இருந்து வேகமாக கீழே இறங்கியது  தெரியவந்துள்ளது. இதனால் விமானம் கட்டுப்பாடின்றி திடீரென வேகமாக தரையிறங்கி கடலில் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால், மலேசியா விமானம் அதன் விமானியாலேயே வேண்டுமென்றே கடலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...