துபாய்: சவுதியில் வெளியில் சொல்ல முடியாத குற்றம் புரிந்ததாக இளவரசர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, சவுக்கடியும் கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவர் தவறு செய்ததாக கூறப்படுகிறது. வெளியில் சொல்ல இயலாத குற்றம் புரிந்த இளவரசருக்கு சிறைத்தண்டனை மற்றும் சவுக்கடி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதன்படி இளவரசர் ஜெத்தா சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவருக்கு சவுக்கடி கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி வெளியாகி உள்ளது. முன்னதாக அவரது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கொலை குற்றம் புரிந்ததற்காக கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி இளவரசர் சவுத் அல் கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்படி இளவரசர் ஜெத்தா சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவருக்கு சவுக்கடி கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி வெளியாகி உள்ளது. முன்னதாக அவரது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கொலை குற்றம் புரிந்ததற்காக கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி இளவரசர் சவுத் அல் கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.