பணத்தை திருட முயன்றவர் கைது

திருப்பூர் மாவட்டம், திருமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (52). புதனன்று கோவைக்கு வந்துள்ளார். அப்போது உணவு உண்பதற்காக அவிநாசி சாலையில் உள்ள ஒரு உணவகம் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உணவகத்தின் உள்ளே சென்றுள்ளார். 

இதனிடையே, இவரது காரில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை மர்மநபர் ஒருவர் திருடிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட அர்ஜூனன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரைப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...