கோவை: சின்னியம் பாளையம் அருகே உள்ள வெள்ளானைப்பட்டி கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கைக்கோலபாளையம் கிராமத்தில் 4 வது வார்டு பகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் நிதியின் மூலம் கட்டப்பட்ட சாக்கடைக் கால்வாய் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சுத்தம் செய்யப்படாமல் இருந்து வந்தது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழ்நிலையில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைதுவிடாமல் தடுக்கும் வகையில் கால்வாய் தூர்வாரப் படவேண்டும் என்ற நிலையில், இளைஞர் ஆர்.தினேஷ்குமார் என்பவர் முயற்சியில் ஊர்ப்பொதுமக்கள் இணைந்து கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தப் பணியில் சுமார் 500 மீட்டர்தூரம் வரை தூர்வாரப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் நீர் வெளியேற இடையூறாக இருந்த மிகப்பெரிய பாறை இயந்திரம் கொண்டு உடைத்து அகற்றப்பட்டு அருகில் இருந்த சின்னப்பள்ளத்துடன் கால்வாய் இணைக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழ்நிலையில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைதுவிடாமல் தடுக்கும் வகையில் கால்வாய் தூர்வாரப் படவேண்டும் என்ற நிலையில், இளைஞர் ஆர்.தினேஷ்குமார் என்பவர் முயற்சியில் ஊர்ப்பொதுமக்கள் இணைந்து கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தப் பணியில் சுமார் 500 மீட்டர்தூரம் வரை தூர்வாரப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் நீர் வெளியேற இடையூறாக இருந்த மிகப்பெரிய பாறை இயந்திரம் கொண்டு உடைத்து அகற்றப்பட்டு அருகில் இருந்த சின்னப்பள்ளத்துடன் கால்வாய் இணைக்கப்பட்டது.