கல்லூரி மாணவன் அறையில் கணினித் திருட்டு- 4 பேர் கைது


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்சந்திரபாபு. இவரது மகன் சந்திரதாஸ் (22). கோவை மாவட்டம் சூலூரிலுள்ள சப்தகிரி நகர் பகுதியில் அறையெடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருகிறார். இவருடன் அறையில் மொத்தம் 3 பேர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதனன்று சந்திரதாஸ் உள்ளிட்ட அனைவரும் வெளியில் சென்றுவிட்டு அறைக்கு திரும்பியுள்ளனர். அப்போது அறையில் 4 பேர் கொண்ட கும்பல் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்களைப் பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சூலூர் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் (21), ஜெயசுந்தர் (21), பரதன், சுபாஷ் என்பதும், அதேக்கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள், நான்குபேரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...