யானைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் - வால்பாறை வனத்துறை


வால்பாறைக்கு உட்பட்ட சின்கோனா, சிறுகுன்றா, நல்லமுடி, பன்னிமேடு மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகள், பள்ளிக் கூடம், சத்துணவுக் கூடம், ரேசன் கடை உள்ளிட்டவற்றை இரவு நேரங்களில் சேதப்படுத்துவது வழக்கம். ஆனால், சில காலமாக பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிடுவது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில், புதனன்று கேரள மாநில எல்லையான வாகமலை எஸ்டேட் பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டு இருந்தன. அதில் ஒரு யானை இரவு நேரத்தில் குட்டியிட்டு தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளின் நடவடிக்கை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த தாய் யானையானது குட்டியிட்டு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தான் ஆகியிருக்கும் எனவே பொது மக்கள் யாரும் அதன் அருகே சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...