திருமணம் செய்ய மறுத்த காதலியை பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளேயே கண்ணாடி பாட்டிலால் காதலன்
தாக்கியதைத்தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சிவில் பொறியியல் பட்டதாரி இளைஞரான வேம்புராஜ் என்பவருக்கும், கனகலட்சுமி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு சில காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்துவரும் கனகலட்சுமியைக் காண வேம்புராஜ் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்குள் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என வேம்புராஜ் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கனகலட்சுமி மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த வேம்புராஜ் அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலால் கனகலட்சுமியின் கழுத்தில் பலமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த கனகலட்சுமியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வடவள்ளி காவல் துறையினர் வேம்புராஜின் மீது பெண் வன்கொடுமைச் சட்டம், தமிழ்நாடு மகளிர் துண்புறுத்துதல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தாக்கியதைத்தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சிவில் பொறியியல் பட்டதாரி இளைஞரான வேம்புராஜ் என்பவருக்கும், கனகலட்சுமி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு சில காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்துவரும் கனகலட்சுமியைக் காண வேம்புராஜ் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்குள் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என வேம்புராஜ் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கனகலட்சுமி மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த வேம்புராஜ் அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலால் கனகலட்சுமியின் கழுத்தில் பலமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த கனகலட்சுமியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வடவள்ளி காவல் துறையினர் வேம்புராஜின் மீது பெண் வன்கொடுமைச் சட்டம், தமிழ்நாடு மகளிர் துண்புறுத்துதல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.